ஐந்தாவது நாள் 16.06.2011 (வியாழக்கிழமை)

எஸ் பி ஒ எ மேனிலைப் பள்ளி

இப்பள்ளி மிகவும் புகழ்பெற்ற பள்ளி. இப்பள்ளியில் சுமார் 4500 மாணவர்கள் பயில்கின்றனர். ஆற்றல் மிக்க இப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியையும் பிற ஆசிரியர்களும் நம் மாணவர்களை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர். நம் மாணவர்கள் இப்பள்ளியிலும் பேரவைக் கூட்டத்தைக் காணும் வாய்ப்பினைப் பெற்றனர். நம் நிலைய ஆசிரியர்களும் பேரவையில் பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த முறையில் விருந்து உபசரித்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டனர்.

நம் மாணவர்கள் பண்பாட்டுப் பெட்டகங்களைக் காணும் வாய்ப்பினைப் பெற்றதோடு அதில் பங்கும் பெற்றனர். 

இத்துடன் இந்தக் கற்றல் பயணத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் வண்ணம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் திரு குணசேகரன் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment